நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று வாக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் உட்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஓட்டப்பிடாரத்தில் 15 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்களும் என மொத்தம் 137 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக 16 ஆயிரம் போலீசாரும் துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவானது காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையோடு சேர்த்து இந்த 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் வரும் 23ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version