தமிழக பேருந்துகள் கேரள எல்லை வரையே இயக்கம்

கேரளாவில் 2வது நாளாக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால், தமிழக பேருந்துகள் எல்லை வரையே இயக்கப்படுகின்றன.12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழில் சங்கங்கள் அகில இந்திய அளவில் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனையொட்டி நேற்று முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலிமையாக உள்ள கேரளாவில் இன்று 2வது நாள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தமிழக அரசு பேருந்துகள், மாநில எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. இதனால் கேரளாவிற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.

Exit mobile version