சமாஜ்வாதி கட்சி கூட்டத்தில் புகுந்து ரகளை செய்த காளை

உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்குள் புகுந்த காளை ஒன்று ரகளை செய்ததால் கட்சியினர் கலக்கமடைந்தனர்.

கன்னோஜில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த காளை ஒன்று கோபத்துடன் கூட்டத்தினரை விரட்டியது. காளையை பிடிக்க முயன்ற கட்சித் தொண்டர் ஒருவரையும் தமிழக ஜல்லிக்கட்டு பாணியில் அந்தரத்தில் பறக்க விட்டது.இதனால் தொண்டர்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தை மறந்து விட்டு காளையை காண்பதற்காக ஓடினர். ஒருவேளை இதுவும் பா.ஜ.க அரசின் சதியாக இருக்குமோ என்று புலம்பியவாறே சமாஜ்வாதி கட்சியினர் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Exit mobile version