'I LOVE YOU' சொன்ன அண்ணன்… மறுத்த பாசமலர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, அண்ணன் என்று அன்போடு பழகிய பெண்ணின் புகைப்படத்தை, காமக் கொடூரன் ஒருவன், முகநூலில் ஆபாசமாக சித்திரித்து வெளியிட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கா பிரம்பட்டியூரை சேர்ந்தவர் நம் கதையின் நாயகன் மஞ்சு நாதன். வேலை வெட்டி இல்லாத ஒரு விஐபி. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமெனில் இன்ஜினியரிங் படித்த அக்மார்க் 90’ஸ் கிட்ஸ். இதனால் 28 வயதை கடந்தும் இவருக்கு காதலும் நிறைவேறவில்லை. கல்யாணமும் கை கூடவில்லை.

கோடை கால கிணறை காட்டிலும் கொடூர வறட்சியில் இருந்த மஞ்சுநாதன், பெண்களை மயக்க புது ரூட் ஒன்றை கண்டு பிடித்தார். அதன்படி தனது CONTACT லிஸ்ட்டில் உள்ள எண்களின் வரிசையை மாற்றி போட்டு அந்த எண்ணுக்கு டயல் செய்து தோழியை தேடியுள்ளது மஞ்சு நாதன் எனும் காய்ந்த மரம்.

”நண்பனுக்கு அழைத்தேன்; லைன் மாறி வந்து விட்டது” என்று எட்டையபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான கோல்டன் பிஷ் ஒன்றுக்கு சில மாதங்களுக்கு முன் தூண்டில் போட்டுள்ளார் மஞ்சு. ஆனால் மறுமுனையில் இருந்து “அண்ணா” என்று பதில் வந்து மஞ்சுவின் நெஞ்சில் இடி இறக்கப்பட்டுள்ளது. எனினும் என்றாவது பழுக்கும் என்ற நம்பிக்கையில் காதல் ஆசையை கன்னி வெடி போல புதைத்து கொண்டு செண்டிமெண்ட் உரம் போட்டு கடலை விவசாயத்தை தொடங்கியுள்ளார்.

ஒரு மாத போன் உரையாடல்…. ஒரு கட்டத்தில் போரடிக்க ”அண்ணனுக்கு உன் முகத்தை பாக்கனும் போல இருக்குமா” என்று மஞ்சு பாசமலருக்கு ஒரு நாள் பரீட்சை வைக்க, பதிலுக்கு” எனக்கும் ஆசைதாண்ணே….ஆனா என்ன பண்றது…என்கிட்ட பேசிக் போன்தானே இருக்கு” என்று அன்ணனிடம் ஆன்ராய்டு போனுக்கு அடிப் போட்டுள்ளார் அந்த அன்பு தங்கை.

மஞ்சு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க வீடியோ காலில் விவசாயம் செழித்து வளர தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்பு தங்கையை வற்புறுத்தியுள்ளார். இதனை அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு, ”நான் வேணாம்…நான் வாங்கி தந்த செல்போன் மட்டும் வேணுமோ” என்று மிரட்ட, உனக்கு ஒரு கும்பிடு… உன் போனுக்கு ஒரு கும்பிடு என போனை கொடுத்து விட்டு பாசமலர் பார்ட் 2வில் இருந்து பாதியிலேயே வெளியேறிள்ளார் அந்த மலர்ந்தும் மலராத மலர்.

கோஷ்டன் பிஷ்ஷின் முகநூல் கணக்கை அவர் போனில் இருந்து லாங்கின் செய்த மஞ்சு, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, பாலியல் அழைப்பு விடுப்பது போல பலருக்கு ஆபாச செய்தி அனுப்பியுள்ளா. தகவல் அறிந்து கோல்டன் பிஷ் போலீஸ் உதவியை நாட, மஞ்வை போலீசா கைது செய்து கைவிலங்கி பூட்டினர்.

 

Exit mobile version