துருக்கியில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்து விபத்து

துருக்கியில் கனமழை காரணமாக பாலம் ஒன்று இடிந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. துருக்கியில் கருங்கடலுக்கு அருகே உள்ள டெர்மே நகரில் கனமழை பெய்ததன் காரணமாக, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், பாலத்தைக் கடந்து சென்ற பாதசாரிகளோடு, அங்கிருந்து காரும் நீரில் விழுந்தன. பாலம் இடிந்த விபத்தில் சிக்கிய இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவலாகி வருகிறது. 

Exit mobile version