ஜலசமாதி அடைந்ததாக கூறி உயிர்விட்ட சிறுவன் அடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஜலசமாதி அடைந்ததாக கூறப்படும் சிறுவனின் உடலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்ய உள்ளது.

ஆரணி அருகே உள்ள படவேட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரின் மகன் தன நாராயணன். கடந்த 24ம் தேதி வயல்வெளியில் இருந்த கிணற்றில், தியான நிலையில் ஜலசமாதி அடைவதாக கூறி, கிணற்றில் குதித்து உயிர்விட்டார். இதையடுத்து வயல்வெளி நிலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் உயிருடன் சமாதி நிலையில் பூமிக்கு அடியில் உள்ளார் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதைனை செய்ய உள்ளனர்.

Exit mobile version