கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் சிறுவன் கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனை கொலை செய்யுமாறு கூறிய கொடூரத் தாய் மற்றும் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெடும்வரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம்-துர்கா தம்பதி. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சூர்யா, தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தனது பேரனை காணவில்லை என முதியவர் தேடி அலைந்த நிலையில், சூர்யாவை, அண்ணாமலை என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக, அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சூர்யா, குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அண்ணாமலையை பிடித்து போலீசார் விசாரிக்கையில், நெடும்வரபாக்கத்தைச் சேர்ந்த கோபால் என்பவரிடம் ஒப்படைத்ததாக கூறியுள்ளார். பின்னர் கோபாலை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சூர்யாவின் தாய் துர்காவிற்கும், கோபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் தனிமையில் இருந்தபோது சூர்யா பார்த்து விட்டதால், அவரின் தந்தையிடம் கூறுவதற்கு முன் சிறுவனை கொலை செய்ய துர்கா கூறியதால், கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துர்கா மற்றும் கோபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Exit mobile version