குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்

பெரம்பலூரில் துப்பாக்கி குண்டு முதுகில் பாய்ந்த நிலையில் சிறுவன் ஒருவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்ற சிறுவன் உறவினர்கள் இரண்டு பேருடன் இரு சக்கர வாகனத்தில் தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது அவனது முதுகில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து, சிறுவன் ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சட்ட விரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு வன விலங்குகளை வேட்டையாட மூன்று பேரும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாரத விதமாக துப்பாக்கி வெடித்து, சிறுவனின் முதுகில் குண்டு பாய்ந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version