125 வருடங்களாக உலகத்தையே புரட்டிப்போட்ட புத்தகம் : நடிகர் ரஜினிகாந்த்

உலக புகழ் பெற்ற ஆன்மீக நூலான ஒரு யோகியின் சுய சரிதத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். குறுந்தகட்டை சுவாமி சுத்தானந்த கிரி வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக உலகத்தில் 125 வருடங்களாக உலகத்தையே புரட்டிபோட்ட புத்தகம் இது என்றும், கடவுளின் மீது உண்மையான நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்றார்.

Exit mobile version