புதுவையில் 10 நாட்கள் நடைபெறும் 22-வது புத்தக கண்காட்சி

புதுவையில் 10 நாட்கள் நடைபெறும் 22-வது புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன. புதுச்சேரி எழுத்தாளர் சங்கம் சார்பில் 22- வது புத்தக கண்காட்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100 புத்தக வெளியீட்டாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.

Exit mobile version