குப்பையில் உடல் உறுப்புகள் கிடைத்த சம்பவம்: கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரங்கள்

சென்னை பள்ளிக்கரணையில், குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது, தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவினுடையது என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21ம் தேதி, பள்ளிக்கரணையில், குப்பை கிடங்கினுள், பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கை மற்றும் கால்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளிக்கரணை போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இயந்திரம் மூலம் உடல் உறுப்புகளை வெட்டி இருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல் உறுப்புகள், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுக்கு சொந்தமானது என்பதும், குடும்ப தகராறில் அவரது கணவர் பாலகிருஷ்ணனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version