முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் இன்று தகனம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல், இறுதி அஞ்சலிக்குப் பிறகு இன்று தகனம் செய்யப்படுகிறது. 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி உடலுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணி வரை இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர், அங்கிருந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக பாஜக தலைமையகத்திற்கு அருண் ஜேட்லியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாஜக தலைமையகத்திலிருந்து தொடங்கும் இறுதி ஊர்வலம், நிகாம் போத் காட் வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

Exit mobile version