அரசு மரியாதையுடன் டி.என்.சேஷனின் உடல் தகனம்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், டி.என்.சேஷனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த போது பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த டி.என்.சேஷன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

இவரது மறைவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று டி.என்.சேஷனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பல்வேறு தரப்பினரின் மரியாதைக்கு பிறகு டி.என்.சேஷனின் உடல் பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தின் தகனம் செய்யப்பட்டது.

Exit mobile version