படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் முனியசாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 11ம் தேதி இலங்கை கடற்படையின் ராட்சத ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் முனியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் யாழ்பாணத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தின் இலந்தைகூட்டம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு முனியசாமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version