மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத பாஜக

தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் துரத்தி அடித்து, படகுகளை கடத்தி செல்வதும், மீனவர்களை தொடர்ந்து சிறை படுத்துவதும் வழக்கமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றெல்லாம் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாக குற்றம்சாட்டிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் மாதக்கணக்கில் அவர்களை சிறையில் அடைக்கப்படாமல் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பாஜகவின் இந்த நான்காண்டு கால ஆட்சியில் 150 க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்ட்ட படகுகள் சேதமடைந்துவிட்டதாகவும், இதற்கு இலங்கை அரசிடமிருந்து மீனவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version