31% மறைமுக வரி வசூலித்த காங்கிரசிடமிருந்து மக்களை மீட்டது பாஜக தான்- அருண் ஜெட்லி

31 சதவீத வரி விதித்து நாட்டை ஒடுக்கிய காங்கிரசிடமிருந்து பாஜக தான் மக்களை மீட்டெடுத்தது என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு மாநிலங்களின் வரி வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருப்பதாக ஜெட்லி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் வருவாய் அதிகரித்ததால் தான் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள அவர், முந்தைய காங்கிரஸ் அரசு 31 சதவீதம் அளவுக்கு மறைமுகமாக வரி வசூலித்ததாக கூறியுள்ளார். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு வரியை 28 சதவீதமாக குறைத்தது என்று ஜெட்லி தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு சராசரி ஜி எஸ் டி வருவாய் 89 ஆயிரத்து 700 கோடியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு இது 97 ஆயிரத்து 100 கோடியாகவும் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version