பாஜகவில் இணைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு: குமாரசாமி அரசுக்கு நெருக்கடி

பாஜகவில் இணைய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு முரளிதர் ராவ் அழைப்பு விடுத்துள்ளதால் குமாரசாமி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்காக ஆப்ரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவிற்கு வந்தால் 100% வெற்றி உறுதி என்றும் கர்நாடகாவில் பாஜக அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்று அவர் கூறினார். பாஜகவின் இந்த பகிரங்க அழைப்பு காங்கிரஸ் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால், முதலமைச்சர் குமாரசாமியின் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

Exit mobile version