கங்கை நதியை பா.ஜ.க அரசு சிறப்புடன் தூய்மைப்படுத்தியிருக்கிறது

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில், பாஜக அரசு சிறப்புடன் செயல்பட்டிருப்பதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசை சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்நிலையில் பா.ஜ.க அரசை புகழ்ந்து அவர் பேசியுள்ளார். கங்கை நதியை தூய்மைப்படுத்த, காங்கிரஸ் ஆட்சியில் 5 முறை முயற்சிகள் எடுத்ததாகவும், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பா.ஜ.க அரசு கங்கை நதியை முனைப்புடன் தூய்மைப்படுத்தி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் சிறப்பாக நடத்துள்ளதாகவும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கும் ஜன்தின் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Exit mobile version