ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்

பட்டியல் இனத்தவரை களங்கப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், கைது செய்யக் கோரி, தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆதி திராவிடர்கள் நீதிபதியாக வந்ததற்கு திமுக போட்ட பிச்சை என்று பட்டியல் சமூகத்தினர் குறித்து,  தரம்தாழ்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பட்டியல் இனத்தவருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்  எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version