குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வெண்டைக்காய் விவசாயம்

வெண்டைக்காய் விவசாயம், குறைந்த செலவில் அதிக லாபம் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் வெண்டைக்காயை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். குறைந்த அளவிலேயே தண்ணீர் தேவைப்படுவதாலும் பராமரிப்பது எளிதாக இருப்பதாலும் வெண்டைக்காயை பயிரிடுவதாக தெரிவிக்கும் விவசாயிகள், வெண்டைக்காய் விவசாயம் குறைந்த செலவில் அதிக லாபத்தை தருவதாகவும் கூறுகின்றனர்.

60 நாட்களில் வெண்டைக்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை போவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

Exit mobile version