சென்னையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

சென்னையில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோயில் அருகே மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பேரணியானது திருவான்மியூரில் துவங்கி பாலவாக்கம் கடற்கரை சாலையில் நிறைவுற்றது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Exit mobile version