பேனர்களில் கலக்கும் ஹீரோ "சின்னத்தம்பி"

கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் சின்னதம்பி யானைக்கு பொதுமக்கள் பேனர்கள் வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, தன்னார்வலர்கள் இணைந்து பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில், ” சேவ் சின்னதம்பி என்றும் மனிதர்கள் செய்யும் குற்றத்திற்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா? காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்… காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்..” என அச்சடிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன், சின்னத்தம்பிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, உரிய அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Exit mobile version