ரயில்வே தண்டவாளத்தில் ரூ.37 லட்சம் பணத்துடன் கிடந்த பை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கட்டுகட்டாக பணத்துடன் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் பை ஒன்று கிடந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் எடுத்து அருகில் உள்ள டீக்கடையில் கொடுத்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் என்ற தங்க நகை வியாபாரி ரயிலில் அந்த பணத்தை தான் தவற விட்டதாக உரிமை கொண்டாடினார். அதில் 37 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் அவர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். பணத்தை எண்ணி பார்த்த போது 36 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. எனவே யாருடைய பணம் என்பது உறுதியாகும் வரை அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version