அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை ஜனவரி 10ம் தேதி விசாரிக்கவுள்ளது. இந்த அமர்வில், பாப்தே, ரமணா, யு.யு லலித், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் உள்ளனர்.

Exit mobile version