மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை

தமிழகத்தில் காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகமெங்கும் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் விற்பதை விட, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விலை குறைவாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, விரைவில் இந்த தடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறினார்.

Exit mobile version