மயிலாடுதுறையில் புவியைக் காத்தல் எனும் தலைப்பில் நடந்த ஓவியப்போட்டி

மயிலாடுதுறையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. 48வது தேசிய பாதுகாப்பு வாரம் வரும் மார்ச் 4ஆம் தேதி துவங்கி 10ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி.சி சார்பில், மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் எரிபொருட்களை கையாளுவது குறித்தும், எரிபொருள் தேவைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஓவியப்போட்டியில் புவியைக் காத்தல், மரம் வளர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வண்ண ஓவியங்கள் வரைந்தனர். பின், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version