2019-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

போட்டியில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் , 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், மோட்டார் பைக், பிரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

 

Exit mobile version