வாகா, வங்கதேச எல்லையில் ராணுவத்தினர் குடியரசுதின விழா கொண்டாட்டம்

70வது குடியரசு தினத்தை எல்லையில் வீரர்கள் கொண்டாடினர்.பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள வாகா எல்லையில், தேசியக் கொடியை ஏற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய இந்திய ராணுவத்தினர், இனிப்புகளை பரிமாறி குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

அசாம் மாநிலம் புல்பாரியில் உள்ள வங்கதேச எல்லையில் இருநாட்டு வீரர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். வங்கதேச ராணுவ வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தினர் இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர்.

Exit mobile version