அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்!

அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம் என தொல்லியல் துறை வேண்டுகோள். கொரோனா வைரஸின் தாக்கம் நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக முழுவதும் உள்ள திரையரங்கங்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 பகுதியில் அகழாய்வு நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் வரத்து அதிகரித்ததால்,பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கீழடி அகழாய்வு பணி நடைபெறும் பகுதிக்கு வர வேண்டாம் என தொல்லியல் துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version