அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் அராஜகம்

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவினரால் பதற்றமான சூழல் உருவாகியது. திமுகவின் இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடியில் திமுகவினர் அதிகளவில் குவிந்தனர். தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரை தடுத்தததால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. திமுகவினரின் அராஜகத்தை தட்டிக் கேட்டதால், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினருக்கு வாக்கு வங்கி அதிகம் இருக்கும் இப்பகுதியில், தேர்தலை சீர்குலைக்க திமுகவினர் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுகவினருக்கு உள்ள மக்களின் ஆதரவை தடுக்கம் வகையில், திமுகவினர் அத்துமீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மக்களை திமுகவினர் வாக்களிக்கவிடாமல் தடுத்தும், பல்வேறு சலுகைகள் பெற்றுத் தருவதாகவும் கூறி வாக்குகள் பெற முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். திமுகவினரின் அராஜகம் பற்றி அதிமுகவினர் அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.

Exit mobile version