சட்டப் படிப்புகளில் சேர 16ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே 16ம் தேதி முதல் வழங்கப்படும் என்று, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளநிலை பட்ட படிப்பு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளை வழங்கி வருகின்ற ன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பம் வரும் 16ம் தேதிமுதல் வழங்கப்படும் என்ற அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ஆயிரம் ரூபாயும், தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக 100 ரூபாய் சேர்த்தும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 12 இணைப்புக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க மே 31ம் தேதி கடைசி நாளாகும்.

Exit mobile version