திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலையிலும் இரவிலும் சிம்ம வாகனம், முத்துப்பந்தல் சேவை, கருட சேவை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இறுதி நாளில் கொடியிறக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

Exit mobile version