திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது வருடாந்திர தெப்ப உற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவத்தில் ருக்மணி சமேதரராய் எழுந்தருளிய எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, ருக்மணி சமேதரராய் எழுந்தருளிய எம்பெருமான் தெப்ப குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் மலையப்ப சுவாமி தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கொரோனா பரவலில் இருந்து உலகம் மீண்டு வர வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

Exit mobile version