செப்டம்பர் 15ம் தேதி அஞ்சல் துறை தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட அஞ்சல் துறை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அஞ்சல் துறையில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து, அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட அஞ்சல் துறை தேர்வுகள் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version