விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக விமான நிலையம் அமைக்கப்படும் என கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்…

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற விமான நிலைய முதலாம் ஆண்டு விழாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கண்ணூரில் தொடங்கப்பட்ட விமான நிலையத்தின் மூலமாக இந்த ஆண்டு 10 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு கண்ணூரில் இருந்து அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version