அதிமுக இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மாற்றம்

இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

வரும் மே-19ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை, அதிமுக தலைமைக்கழகம் அண்மையில் நியமித்தது. இந்நிலையில் அதில் சில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை மாற்றம் செய்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவித்துள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சூலூர் தொகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.

Exit mobile version