சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியைக் கொண்டாடிய அதிமுகவினர்

சிவகங்கை மாவட்டம் மானமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் திமுக வேட்பாளர் காசிராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க சிவகங்கை நகரில் ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version