சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்- எஸ்.பி வேலுமணி

சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாண்டியராஜன், ஓ.எஸ். மணியன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டானர். தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவதாக கூறினார். மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.

 

Exit mobile version