அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் : முதலமைச்சர் பழனிசாமி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திமுக கிடப்பில் போட்டதால், 10 ஆண்டு காலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். நாகப்பட்டினம் மக்களவை தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து வேதாரண்யத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், 10 ஆண்டுகளாக நடுவர் மன்ற தீர்ப்பு கிடப்பில் இருந்ததாகவும் , அதனை அரசிதழில் வெளியிட திமுக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Exit mobile version