சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்-எஸ்.பி. வேலுமணி

எந்த அரசியல் சூழ்நிலை இருந்தாலும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாகவும், உக்கடம் பகுதியில், அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எந்த அரசியல் சூழ்நிலை இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக அதிமுக அரசு இருக்கும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி தெரிவித்தார்.

Exit mobile version