துரைப்பாக்கத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம்

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தென்சென்னை வேட்பாளாராக போட்டியிடும் ஜெயவர்தன் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டுமென ஜெயவர்தன் தலைமையில் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

Exit mobile version