அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி , சொந்த ஊரான காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புபிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவாகும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவரதன் வேண்டுகோள் வைத்தார். கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஜெயவர்தன், நியூஸ் ஜெ செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அதிமுக கூட்டணியை மக்கள் அமோக வெற்றி பெற செய்வார்கள் என்றும் ஜெயவர்தன் கூறினார்.

தஞ்சை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நடராஜன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களித்தார் அவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version