அதிமுக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, அதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு அவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை சுட்டிக் காட்டியும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடத்தில் எடுத்து கூறியும் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version