உரங்களை இருப்பு வைக்கும் முயற்சியில் வேளாண் துறை மும்முரம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக கொச்சியிலிருந்து 688 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் உழவு செய்வதற்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இங்குள்ள 14 வட்டாரங்களில் 1 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்கும் முயற்சியில் வேளாண் துறை மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கொச்சியிலிருந்து 688 மெட்ரிக் டன் எடை கொண்ட உரம் ரயில் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Exit mobile version