எச்.ஐ.வி தொற்று கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவகாரம், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ராதாகிருஷ்ணன் உறுதி 

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எச்.ஐ.வி தொற்று கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

 

Exit mobile version