இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மஞ்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது நண்பர் கருப்புசாமியுடன் பழனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கணக்கன்பட்டி பேருந்துநிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பழனியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கருப்புசாமியின் கால்கள் துண்டான நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version