பெரிய அசம்பாவீதம் ஏதுமின்றி நிறைவடைந்த 6வது கட்ட வாக்குப்பதிவு

17வது மக்களவை தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிறைவடைந்தது.

6வது கட்ட தேர்தலில் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், அரியானா மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 6வது கட்ட தேர்தலில் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் ஷீலா தீக்சிட் உள்ளிட்டோரின் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஒருசில இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி 6வது கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

Exit mobile version