பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.

இன்று காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து அதிமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களுக்கு கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா உட்பட பிற மாநிலங்களிலும், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version