கோலாகலமாக நடைபெற்ற 50ம் ஆண்டு ரேக்ளா பந்தையம்

தேனி மாவட்டம் கம்பத்தில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் 50ம் ஆண்டு ரேக்ளா பந்தயம், கம்பம் ஆர்.ஆர் விளையாட்டு கழகம் மற்றும் வீர விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்றது. கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி போட்டியை ஆர்.ஆர் விளையாட்டு கழக தலைவர் ராஜாங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து 139 மாட்டு வண்டிகள் இதில் கலந்து கொண்டன. வெற்றிப் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version