3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் பே ஓவல் திடலில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 47 புள்ளி 1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Exit mobile version